தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான தகவலை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற கூட்டத்தின்போதே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின் கீர்த்தியை பாதிக்கும் வகையில் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரிய 1999ம் ஆண்டில் இருந்து சுயாதீன ஆணைக்குழுக்களின் அவசியம் குறித்து வலியுறுத்தல்களை விடுத்து வந்துள்ளார் என்பதையும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.